Tuesday, August 29, 2017

இராவணன் இயற்றிய நூல்கள்


தமிழ்ப் பெருமன்னன் இராவணன் இயற்றிய நூல்கள் என  அறியப்பட்டுள்ள நூல்கள் விபரம்.
https://www.facebook.com/groups/siddhar.science

1. உடற்கூறு நூல்
2. மலை வாகடம்
3. மாதர் மருத்துவம்
4. இராவணன் – 12000
5. நாடி, எண்வகை பரிசோதனை நூல்
6. இராவணன் வைத்திய சிந்தாமணி
7. இராவணன் மருந்துகள் - 12000
8. இராவணன் நோய் நிதானம் - 72 000
9. இராவணன் – கியாழங்கள் – 7000
10. இராவணன் வாலை வாகடம் – 40000
11. இராவணன் வர்ம ஆதி நூல்
12. வர்ம திறவுகோல் நூல்கள்
13. யாழ்பாணம் – மூலிகை அகராதி
14. யாழ்பாணன் – பொது அகராதி
15. பெரிய மாட்டு வாகடம்
16. நச்சு மருத்துவம்
17. அகால மரண நூல்
18. உடல் தொழில் நூல்
19. தத்துவ விளக்க நூல்
20. இராவணன் பொது மருத்துவம்
21. இராவணன் சுகாதார மருத்துவம்
22. இராவணன் திராவக தீநீர் நூல் – அர்க்க பிரகாசம்
23. இராவணன் அறுவை மருத்துவம் – 6000
24. இராவணன் பொருட்பண்பு நூல்
25. பாண்ட புதையல் முறைகள் – 600
26. இராவணன் வில்லை வாகடம்
27. இராவணன் மெழுகு வாகடம்

* * * * * * * * * * * * * * * * * * * * *
https://www.facebook.com/groups/siddhar.science
"இராவணன் மேலது நீறு எண்ணத் தகுவது நீறு
பராவணம் ஆவது நீறு பாவம் அறுப்பது நீறு
தராவணம் ஆவது நீறு தத்துவம் ஆவது நீறு
அராவணங்கும் திருமேனி ஆலவாயான் திருநீறே"

-திருநீற்றுப்பதிகம்-





இராவணன் மேலது நீறு – இரவின் வண்ணம் கொண்ட இராவணன் பக்தியுடன் தன் அங்கமெங்கும் அணிவது திருநீறு

எண்ணத் தகுவது நீறு - தியானிக்க ஏற்றது திருநீறு

பராவணம் ஆவது நீறு – பாராயணம் செய்யப்படுவது திருநீறு

பாவம் அறுப்பது நீறு – பாவங்கள் என்னும் தளைகளை அறுப்பது திருநீறு

தராவணம் ஆவது நீறு – தரா என்னும் சங்கின் வண்ணம் ஆவது திருநீறு

தத்துவம் ஆவது நீறு – எல்லாவற்றிற்கும் அடிப்படையானத் தத்துவமாய் இருப்பது திருநீறு.

அராவணங்கும் திருமேனி ஆலவாயான் திருநீறே – அரவுகள் (பாம்புகள்) வணங்கும் (நிறைந்திருக்கும்) திருமேனியை உடைய திருவாலவாயான் திருநீறே.
https://www.facebook.com/groups/siddhar.science


 Aum Muruga ஓம் முருகா 

நீங்களும் வாசித்து அறிந்து கொள்ளுங்கள்.
https://twitter.com/Ongarakudil

Posted by Nathan Surya 

Monday, August 28, 2017

நிறைமொழி மாந்தர் வகுத்த இறைமொழி தமிழ்


தமிழ் தனித்தே சாதரண ஒரு மொழி மட்டுமல்ல. அது கட்டற்ற அறிவியற் களஞ்சியம். தோண்டத்தோண்ட வற்றா அறிவருவி. தமிழில் இல்லாதது ஏதுமில்லை.

தமிழ் தந்து கோடி யுகங்கள் தாண்டியும் இன்றும் யோதிவடிவாக வாழ்கிறார்கள் சித்தர்கள். சித்தர்கள் மொழியே தமிழ்மொழி. சித்தர்கள் கோடியுகம் வாழ்ந்தால் தமிழும் கோடியுகங்கள் வாழ்வதாகக் கருதமுடியும். இது பலரதும் புருவத்தை நம்பமுடியாமல் உயர்த்தவே செய்யும். தமிழ் பேசவல்ல சித்தர்கள் ௯(9) கோடி இருப்பதாக சித்தநூல்களில் கூறப்பட்டுள்ளது. சித்தர்கள் தந்த தமிழில் இல்லாதது ஒன்றுமில்லை. விளையாட்டாக வெளிநாட்டவர் ஒருவர் அப்ப மயிர்பற்றி சித்தர்கள் தமிழில் உள்ளதா எனக்கேட்க, உண்டெனக் கூறி தமிழறிஞர்கள் ஆயிரம் உதாரணம் காட்ட அசந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

உதாரணத்திற்கு:-

தலை முடி கறுக்க:

"எண்ணெய் இட்டு முழுகும் பொது
நெல்லிமுள்ளி யெடுத்து பாலில் ஊறவைத்து
அரையப்பா அரைத்து போட்டு முழுகு"


நெல்லிமுள்ளியை எடுத்து பாலில் ஊறவைத்து அரைத்து எடுத்துஇ எண்ணெய் தேய்த்து முழுகும் போது தலையில் தேய்த்து முழுகினால் தலை முடிகறுக்கும்.

"தலை நரைக்கு மாத்து பொன்பருத்தி
யிலைச் சாறு தேச்சு முழுவு கறுப்பாம்".


பொன்பருத்தியிலைச் சாறெடுத்து தலையில் பூசி முழுக நரை முடி கறுக்குமாம்.

சித்தர்கள் அறிந்திராத கலையெதுவுமில்லை. 64 கலைகளையும் தாண்டி 65வது கலையாகிய சாகாக்கலையையும் அறிந்திருந்தனர். இன்றும் இவர்கள் யோதிவடிவாக வாழ்கிறார்கள் என நம்பப்படுகிறது. அகத்தியர், திருவள்ளுவார், 150 வருடங்களுக்கு முன் வாழ்ந்த வடலூர் வள்ளலார் வரை அனைவரும் சித்தர்கள் என்று கூறப்பட்டுள்ளது.

அய்யன் வள்ளுவர் அருளிய திருக்குறளில் துறவறவியல் பகுதியில் அருளுடைமை, புலால் மறுத்தல், தவம், கூடா ஒழுக்கம், கள்ளாமை, வாய்மை, வெகுளாமை, இன்னா செய்யாமை, கொல்லாமை, நிலையாமை, துறவு, மெய்யுணர்தல், அவாவறுத்தல் ஆகிய 13 அதிகாரங்களில் ஞானக்கருத்துக்கள் உள்ளன. அதிலொரு சில குறள்கள் மட்டும் எடுத்துக்காட்டுகிறோம்.

(எ.கா)

மற்றும் தொடர்ப்பாடு எவன்கொல் பிறப்பு அறுக்கல்
உற்றார்க்கு உடம்பும் மிகை. (குறள் : 345-துறவு)

ஓர்த்துஉள்ளம் உள்ளது உணரின் ஒரு தலையாப்
பேர்த்துஉள்ள வேண்டா பிறப்பு. (குறள் : 357-மெய்யுணர்தல்)

பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்
செம்பொருள் காண்பது அறிவு. (குறள் : 358-மெய்யுணர்தல்)

சார்புஉணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றுஅழித்துச்
சார்தரா சார்தரும் நோய். (குறள் : 359-மெய்யுணர்தல்)


திருவள்ளுவர் திருக்குறளை மட்டும் அருளவில்லை. அய்யன் வள்ளுவப்பெருமான் அருளிய நூல்கள் எண்ணற்றவை. இனி வரும் ஞானச்சித்தர் காலத்தில் இவை மக்கள் பயன்பாட்டிற்கு வரும். அய்யன் வள்ளுவப்பெருமான் அருளிய நூல்களில் சில :

1. ஞானவெட்டியான் - 1500
2. திருக்குறள் - 1330
3. இரத்தினசிந்தாமணி - 800
4. பஞ்சரத்தனம் - 500
5. கற்பம் - 300
6. நாதாந்த சாரம் - 100
7. நாதாந்த திறவுகோல - 100
8. வைத்திய சூத்திரம் - 100
9. கற்ப குருநூல் - 50
10. முப்பு சூத்திரம் - 30
11. வாத சூத்திரம் - 16
12. முப்புக்குரு - 11
13. கவுன மணி - 100
14. ஏணி ஏற்றம் - 100
15. குருநூல் - 51

சித்தர்கள் வகுத்த தமிழ் எண் வடிவங்கள்

தமிழ் எண்கள்

* ௧ = 1
* ௨ = 2
* ௩ = 3
* ௪ = 4
* ௫ = 5
* ௬ = 6
* ௭ = 7
* ௮ = 8
* ௯ = 9
* ௰ = 10
* ௰௧ = 11
* ௰௨ = 12
* ௰௩ = 13
* ௰௪ = 14
* ௰௫ = 15
* ௰௬ = 16
* ௰௭ = 17
* ௰௮ = 18
* ௰௯ = 19
* ௨௰ = 20
* ௱ = 100
* ௱௫௰௬ = 156
* ௨௱ = 200
* ௩௱ = 300
* ௲ = 1000
* ௲௧ = 1001
* ௲௪௰ = 1040
* ௮௲ = 8000
* ௰௲ = 10,000
* ௭௰௲ = 70,000
* ௯௰௲ = 90,000
* ௱௲ = 100,000 (lakh)
* ௮௱௲ = 800,000
* ௰௱௲ = 1,000,000 (10 lakhs)
* ௯௰௱௲ = 9,000,000
* ௱௱௲ = 10,000,000 (crore)
* ௰௱௱௲ = 100,000,000 (10 crore)
* ௱௱௱௲ = 1,000,000,000 (100 crore)
* ௲௱௱௲ = 10,000,000,000 (thousand crore)
* ௰௲௱௱௲ = 100,000,000,000 (10 thousand crore)
* ௱௲௱௱௲ = 1,000,000,000,000 (lakh crore)
* ௱௱௲௱௱௲ = 100,000,000,000,000 (crore crore)

தமிழ் எண்வரிசையும் அளவீட்டு முறைகளும்

ஏறுமுக எண்கள்
**************
1 = ஒன்று -one
10 = பத்து -ten
100 = நூறு -hundred
1000 = ஆயிரம் -thousand
10000 = பத்தாயிரம் -ten thousand
100000 = நூறாயிரம் -hundred thousand
1000000 = பத்துநூறாயிரம் - one million
10000000 = கோடி -ten million
100000000 = அற்புதம் -hundred million
1000000000 = நிகர்புதம் - one billion
10000000000 = கும்பம் -ten billion
100000000000 = கணம் -hundred billion
1000000000000 = கற்பம் -one trillion
10000000000000 = நிகற்பம் -ten trillion
100000000000000 = பதுமம் -hundred trillion
1000000000000000 = சங்கம் -one zillion
10000000000000000 = வெல்லம் -ten zillion
100000000000000000 = அன்னியம் -hundred zillion
1000000000000000000 = அர்த்தம் -
10000000000000000000 = பரார்த்தம் —
100000000000000000000 = பூரியம் -
1000000000000000000000 = முக்கோடி -
10000000000000000000000 = மகாஉகம்

இறங்குமுக எண்கள்
*****************
1 - ஒன்று
3/4 - முக்கால்
1/2 - அரை கால்
1/4 - கால்
1/5 - நாலுமா
3/16 - மூன்று வீசம்
3/20 - மூன்றுமா
1/8 - அரைக்கால்
1/10 - இருமா
1/16 - மாகாணி(வீசம்)
1/20 - ஒருமா
3/64 - முக்கால்வீசம்
3/80 - முக்காணி
1/32 - அரைவீசம்
1/40 - அரைமா
1/64 - கால் வீசம்
1/80 - காணி
3/320 - அரைக்காணி முந்திரி
1/160 - அரைக்காணி
1/320 - முந்திரி
1/102400 - கீழ்முந்திரி
1/2150400 - இம்மி
1/23654400 - மும்மி
1/165580800 - அணு --> ≈ 6,0393476E-9 --> ≈ nano = 0.000000001
1/1490227200 - குணம்
1/7451136000 - பந்தம்
1/44706816000 - பாகம்
1/312947712000 - விந்தம்
1/5320111104000 - நாகவிந்தம்
1/74481555456000 - சிந்தை
1/489631109120000 - கதிர்முனை
1/9585244364800000 - குரல்வளைப்படி
1/575114661888000000 - வெள்ளம்
1/57511466188800000000 - நுண்மணல்
1/2323824530227200000000 - தேர்த்துகள்

அளவைகள்
----------------
நீட்டலளவு
**********
10 கோன் - 1 நுண்ணணு
10 நுண்ணணு - 1 அணு ==> 10 Ångströms = 1 nanometer ?!!
8 அணு - 1 கதிர்த்துகள்
8 கதிர்த்துகள் - 1 துசும்பு
8 துசும்பு - 1 மயிர்நுணி
8 மயிர்நுணி - 1 நுண்மணல்
8 நுண்மணல் - 1 சிறுகடுகு
8 சிறுகடுகு - 1 எள்
8 எள் - 1 நெல்
8 நெல் - 1 விரல்
12 விரல் - 1 சாண்
2 சாண் - 1 முழம்
4 முழம் - 1 பாகம்
6000 பாகம் - 1 காதம்(1200 கெசம்)
4 காதம் - 1 யோசனை

பொன்நிறுத்தல்
************
4 நெல் எடை - 1 குன்றிமணி
2 குன்றிமணி - 1 மஞ்சாடி
2 மஞ்சாடி - 1 பணவெடை
5 பணவெடை - 1 கழஞ்சு
8 பணவெடை - 1 வராகனெடை
4 கழஞ்சு - 1 கஃசு
4 கஃசு - 1 பலம்

பண்டங்கள் நிறுத்தல்
*****************
32 குன்றிமணி - 1 வராகனெடை
10 வராகனெடை - 1 பலம்
40 பலம் - 1 வீசை
6 வீசை - 1 தூலாம்
8 வீசை - 1 மணங்கு
20 மணங்கு - 1 பாரம்

முகத்தல் அளவு
*************
5 செவிடு - 1 ஆழாக்கு
2 ஆழாக்கு - 1 உழக்கு
2 உழக்கு - 1 உரி
2 உரி - 1 படி
8 படி - 1 மரக்கால்
2 குறுணி - 1 பதக்கு
2 பதக்கு - 1 தூணி

பெய்தல் அளவு
*************
300 நெல் - 1 செவிடு
5 செவிடு - 1 ஆழாக்கு
2 ஆழாக்கு - 1 உழக்கு
2 உழக்கு - 1 உரி
2 உரி - 1 படி
8 படி - 1 மரக்கால்
2 குறுணி - 1 பதக்கு
2 பதக்கு - 1 தூணி
5 மரக்கால் - 1 பறை
80 பறை - 1 கரிசை
96 படி - 1 கலம்
120 படி - 1 பொதி.




ஓங்காரக்குடில் Ongarakudil
Wisdom of Siddhas சித்தரியல்




நீங்களும் வாசித்து அறிந்து கொள்ளுங்கள்.
https://twitter.com/Ongarakudil

Posted by Nathan Surya 




Saturday, August 26, 2017

மயிலைக் குயிலாக்கின் பிறவிப்பிணியை வெல்லலாம்..!



மயில் என்பது இடகலை(இடது சுவாசம்), பின்கலை(வலது சுவாசம்) வழியாக ஓடும் காற்று(வாசி). குயில் என்பது இவ்வாசியானது சுழிமுனையில் வசப்படுவது. அப்போது 'வாசி'யாகியான காற்று 'சிவா'வாக மாறும். இவ்வாறு ஞானபண்டிதன் அருளாசியால் வாசி சுழிமுனையில் வசப்பட்டவர் பிறப்பு-இறப்பு எனும் கர்மச்சுழற்சியை வென்று இறையோடு இரண்டறக் கலப்பர்

"வானத்தின் மீது மயிலாடக் கண்டேன்
மயில்குயில் ஆச்சுதடி – அக்கச்சி
மயில்குயில் ஆச்சுதடி"
-ஆசான் வள்ளலார்


இடது நாசிச்(இடது பக்க மூக்கு) சுவாசம் சந்திரகலை எனவும், வலது நாசிச்(வலது பக்க மூக்கு) சுவாசம் சூரியகலை எனவும் அழைக்கப்படும். சந்திரகலையை மதி/இடகலை/இடைக்கால் எனவும், சூரியகலையை பிங்கலை/பின்கலை/வலக்கால் எனவும் அழைக்கப்படுவதுண்டு.

இங்கு 'கால்' என்பது மூச்சைக் குறித்து நிற்கின்றது. அதனால் தான் 'காலனைக் காலால் உதைத்தேன்' எனச் சித்தர்களும் ஞானியரும் கூறுவதுண்டு. இங்கு காலனாகிய இறப்பை, காலாகிய மூச்சுக்காற்றைச் சுழிமுனையில் ஒடுங்கச் செய்வதன் மூலம் பிறவிப்பிணி நீங்கி ஒளியுடம்பு பெற்று மரணமில்லாப் பெருவாழ்வு/சகாக்கலை அடைதலைக் குறிக்கும்.

'விதியை மதியால் வெல்லலாம்' என்பார்கள். இங்கு மதி என்று கூறப்படுவது புத்தி அல்ல. மதி என்றால் சந்திரன். 16 அங்குலம் ஓடக்கூடிய சந்திரகலையை சுருக்க சுருக்க ஆயுள் விருத்தியாகும். எனவே விதி முடிவும் விலகியே போகும். நன்றி

சித்தர் அறிவியல் Wisdom of Siththars


ஓங்காரக்குடில் Ongarakudil


Aum Muruga ஓம் மு௫கா



நீங்களும் வாசித்து அறிந்து கொள்ளுங்கள்.
https://twitter.com/Ongarakudil

Posted by Nathan Surya 



Friday, August 25, 2017

விநாயகர் அகவல் விளக்கவுரை


இந்த பூமிக்கு கீழ் ஒரு சக்தி இருக்கு, பிரமாண்டமான இந்த அண்டத்தை தாங்கிகொண்டிருக்கும் சக்திக்குதான் விநாயகம் என்று பொருள். நம்ம உடம்பில் எப்பிடி இருக்கு விநாயகம்..?! கணபதி அல்லது விநாயகம் கால் எலும்பும் கதிர் எலும்பும் கூடுகின்ற இடத்தில் இருக்கின்றது. கால் எலும்பும் கதிர் எலும்பும் கூடுகின்ற "விநாத்தண்டு விநாயகம் (விநா+அகம் = விநாயகம்)" இருக்கின்ற இடத்தில் சுக்கிலம் / சுரோணிதம் உற்பத்திகின்றது. அந்த இடத்துக்குக் காற்று போகாது. அதுதான் மூலாதாரம். அங்கு எழக்கூடிய சக்தியே குண்டலி சக்தி.



மகான் ஒளவையார் அருளிய விநாயகர்
அகவல் விளக்கவுரை!
https://t.co/ULNCz5Ln5e
சத்தத்தின் னுள்ளே சதாசிவம் காட்டிச்
சித்தத்தின் னுள்ளே சிவலிங்கங் காட்டிச்
அணுவிற் கணுவாய் அப்பாலுங் கப்பாலாய்க்
கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி
வேடமும் நீறும் விளங்க நிறுத்திக்
கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி
ஞானவழி காட்டும் ஒளவையே என் அம்மையே
நின் திருவடிகள் போற்றி..! போற்றி..!
https://youtu.be/LjISsZhS9WE








நீங்களும் வாசித்து அறிந்து கொள்ளுங்கள்.
https://twitter.com/Ongarakudil


Posted by Nathan Surya 




                                                                      || |More videos  || ||  Contact தொடர்பு ||



-1:00:24

8,657 Views
ஓங்காரக்குடில் Ongarakudil - London Branch added a new video: விநாயகர் அகவல் விளக்கவுரை.
விநாயகர் அகவல் விளக்கவுரை
அகத்தியர் துணை

அருட்பெருஞ்சோதி  அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி

நித்ய ஆசி நூல்

வினைகள் தீர்க்கும் விநாயகப் பெருமான் ஆசி நூல்
சுவடி வாசித்தளித்தவர் T.ராஜேந்திரன், B.A., B.Ed.,
ஓம் ஸ்ரீ காகபுஜண்டர் ஸ்ரீ அகத்தியர் நாடிஜோதிட ஆசிரமம்,
டி.வி.எ டோல்கேட், திருச்சி.

31.01.2013

1. ஞான சூட்சுமம் கொண்ட அரசா
ஞானிகள் பூசை வழிமுறையை
வானவரே வியக்கும் வண்ணம்
வழுவாது செய்து கலியுகத்தில்

2. கலியுகத்தில் உலக ஞானிகளை
கருணைபட அழைத்து மக்களுக்கு
தெளிவூட்டும் தேசிகனே வாழ்க
தேவலோக சபையோ என வியக்க

3. வியக்க கண்டேன் ஐங்கரனும் (விநாயகப் பெருமான்)
வினை போக்க இன்று குடிலில்
தயக்கமிலா வரும் அடியவர்க்கு
தரணியிலே நந்தன கலை திங்கள்

4. திங்களிலே மூவாறு திகதியதும்
(நந்தன வருடம் தை மாதம் 18ம் நாள்)
தெரிவிப்பேன் நித்ய ஆசிதனை
ஓங்காரன் (ஆறுமுகப்பெருமான்) புஜத்தில் அமர்ந்து
உறுதுணைபட அருள்வேன்

5. அருள்பெற அணுகும் அனைவருக்கும்
அல்லல் நீக்கி அரங்கன் மூலம்
அருள்பலம் இனிதே ஈந்திடுவேன்
அன்னமதை குடிலில் உண்பவர்க்கு

6. உண்பவர்க்கு அருமருந்தாகி
உடல்பிணி அகற்றி நிற்பேன்
கண்டமிடரை விரட்டியும்
காத்து வளமும் சேர்ப்பேன்

7. சேர்ப்பேனே செயல் மாற்றமுள்ளவர்க்கும்
சிறப்பறிவு ஊட்டி இனிதே
வார்ப்பேனே (உருவாக்குவேனே) ஞானவழி அவரவரை
வளர்ப்பேனே குறைவிலா சிறப்புற

8. சிறப்புள அமுதை உண்ணும்
சிறார்கட்கும் ஞான ஆற்றல்
மறுப்பில்லா ஞாபகசக்தி கூட்டி
மண்ணுலகில் புகழ்பெறச் செய்திடுவேன்

9. புகழ்பட இன்று துறையூர் எல்லை
புண்ணியக் குடிலாம் பிரணவக் குடிலில்
வகைபட கண்டு தேசிகரை
வணங்கி தொண்டில் கலப்பீர்

10. கலந்து கவலைகள் தீர
கலச தீட்சை பணிவுடன் ஏற்று
வலம் வயது தொண்டாற்றி
வையத்துள் சிறக்க தொடர் சேவை

11. சேவை புரிய அவரவர்க்கும்
சிவராசன் வழி என் அருள்
அவைமெச்ச (பலரால் போற்றப்படும்நிலை) அடைந்து உயர்த்தும்
அரங்கனுள் இருக்கின்றேன் உலகை காக்க நித்ய ஆசி முற்றே.

ஒரு மனிதன் ஞானத்தை அடைவது என்பது அவ்வளவு எளிதல்ல. அவர் பல
ஜென்மங்களில் பல ஞானிகளிடம் ஆசி பெற்று ஞானிகள் மனம் மகிழும்படி நடந்து அவர்களது ஆசியினால் ஞான இரகசியங்கள் அனைத்தையும் கற்றுத் தேர்ந்து இறுதியில் ஒரு ஜென்மத்தில் ஞானத்தலைவனால் வாசிவசப்பட்டு ஞானிகள் உதவியால்தான் மரணமில்லா பெருவாழ்வை அடைந்து ஞானி என்ற பட்டத்தையும் பெற இயலும்.

எந்தவொரு மனிதனும் மரணமில்லா பெருவாழ்வாகிய ஞானத்தை ஞானிகளின் அருளும், ஆசியும், துணையும், வழிகாட்டுதல்களும் இல்லாமல் கண்டிப்பாக அடைந்வே முடியாது. சொல்லொண்ணா உருக்கமும், மனஉறுதியும், மனஒருமையும் கொண்டு நாத்தழும்பேற ஞானிகளே கசிந்துருகி அன்பு கொண்டு “என்பிள்ளை என்பிள்ளை” என வாரியெடுத்துக் கொள்ளும்படியான அளவிற்கு ஞானிகள் அத்தனைபேரும் இதுபோல் மனம் உருகி பூஜை செய்தவரை இதுவரை கண்டதில்லை என வியக்குமளவிற்கும், அவர்களே அளவில்லா மகிழ்ச்சி அடையும் அளவிற்கும் புளங்காகிதமடைந்து நெகிழும் அளவிற்கு பூஜை செய்து பெறுதற்கரிய ஞானத்தைப் பெற்றவர்தான் ஓங்காரக்குடிலாசான் அரங்கமகாதேசிகர்.

அப்படி பல ஆயிரம் ஆண்டுகள் பாடுபட்டு சேர்த்த அந்த ஞான இரகசியங்களையும், ஞானிகளை எப்படியெல்லாம் வணங்கினால் மனமிரங்கி அருள் செய்வார்கள், எப்படியெல்லாம் ஞானிகளை அழைப்பது, என்னென்னவெல்லாம் ஞானிகளிடம் வேண்டுகோளாக கேட்பது, எதையெல்லாம் கேட்கக்கூடாது. இப்படி அநேகம் அநேகம் ஞான இரகசியங்களையெல்லாம் தாம் பெற்ற அந்த ஞானானுபவ நிலைகளை, உலகமக்களும் பெறவேண்டுமென்று பொதுநோக்கிலே உலக மக்கள் அறியும் பொருட்டு வெளிப்படையாக அனைவருக்கும் அறிவித்து அவர்களையும் ஞானிகள் திருவடியைப் பற்றச் செய்து இக்கலியுகத்தினையே ஞானயுகமாக மாற்றி வருகிறார் மகாஞானி ஆறுமுகப்பெருமானின் அவதாரம் அரங்கமகாதேசிகர்.

அரங்கமகாதேசிகரின் அளப்பரிய முயற்சிகளால் ஓங்காரக்குடிலைச் சார்ந்த அனைவரும் ஞானிகள் திருவடியைப் பற்றி பூசித்து தேவநிலையை எட்டும் நிலையிலிருப்பதால் ஓங்காரக்குடிலே சித்தர்கள் சபையோ என வியக்கும் அளவிற்கும், தேவலோக சபையோ என வியக்குமளவிற்கும் பண்புள்ள அன்பர்கள் கூட்டத்தால் நிறைந்துள்ளது என வியக்கிறார் ஐங்கரனாகிய விநாயகப் பெருமான்.

தர்மத்தின் தலைவனாம் ஆற்றல் பொருந்திய ஆறுமுகப்பெருமானின் பன்னிரு கரங்களிலும், விநாயகப் பெருமானும் சார்ந்து தர்மத்தைக் காக்கும் பொருட்டு ஆறுமுகப்பெருமான் கொடியவர்களை அடக்கி நல்லோரைக் காக்கும்பொழுது விநாயகப் பெருமானாகிய நானும் ஆறுமுகனின் கரத்திலிருந்து ஆற்றல் வழங்கி அருள் செய்கிறேன் என்கிறார் விநாயகப்பெருமான்.

ஞானிகளெல்லாம் ஓங்காரக்குடிலில் தங்கி அருள் செய்வதால் இங்கு
சமைக்கப்படும் உணவு ஞானிகளின் அருள் பார்வையால் நோய் தீர்க்கும் மருந்தாக மாறி உணவு உண்பவர்களுக்கு நோய்கள் நீங்கி, அவர்களுக்கு உள்ள கண்டங்களும் இடர்களும் நீங்கி சுகம் பெறுவார்கள். சன்மார்க்க நெறிகளிலிருந்து மாறுபட்டு வேறு வழிகளில் செல்ல நினைப்பவர்களை தடுத்து ஆட்கொண்டு அருள் செய்வேன். ஓங்காரக்குடிலில் உணவு உண்கின்ற கல்வி கற்கும் மாணவர்களுக்கு தாம் கற்ற கல்வி மறக்காமல் நினைவில் தங்குவதற்கு நான் அருள் செய்வேன். கல்வியில் அவர்கள் தேர்ச்சியடைந்து பெரிய பெரிய பதவிகளில் அமரச்செய்து புகழடையவும் செய்வேன் என கூறுகிறார் விநாயகப்பெருமான்.

நந்தன வருடம் தை மாதம் 18ம் நாள் (31.01.2013) வியாழக்கிழமையான இன்றைய தினம் புண்ணியத்தின் உறைவிடமான ஓங்காரக்குடிலை நாடி ஓங்காரக்குடிலாசான் அரங்கமகாதேசிகரை முறையாக வணங்கி வழிபட்டு தொண்டு செய்தும் அவர்களது கவலைகள் தீரும் பொருட்டு ஆசானிடத்தில் “கலச தீட்சை”யை தீட்சை உபதேசமாக பெற்றும், பணிவுடன் தீட்சை ஏற்று குடிலாசானை வணங்கி குடிலில் நடைபெறும் அறப்பணிகளுக்கு தொண்டு செய்தும், பொருளுதவி செய்தும் வருபவர்களுக்கு சிவராஜயோகியாகிய ஓங்காரக்குடிலாசான் அரங்கமகாதேசிகர் வடிவில் விநாயகப் பெருமானாகிய நானும் கலந்து தீட்சை பெறுபவர்களுக்கும், தொண்டு செய்பவர்களுக்கும், பொருளுதவி செய்பவர்களுக்கும் ஆசி அருள்வேன். அரங்கரை நானும் சார்ந்து இவ்வுலகை காப்பேன் என்கிறார் விநாயகப்பெருமான்.

-சுபம்-