Friday, September 22, 2017

சாகாதவனே சன்மார்க்கி!



சாகாதவனே சன்மார்க்கி!
சாகாதவனே சற்குரு!
சாகாதவனே முற்றுப்பெற்ற சித்தன்!

உருத்தரித்த நாடியில்
ஓடுகின்ற வாயுவை
கருத்திலே இருத்தியே
கபாலமேற்ற வல்லிரேல்
விருத்தரும் பாலனாவார்
மேனியும் சிவந்திடும்
-ஆசான் சிவவாக்கியர்

இடது, வலது மூச்சுத் (மூக்கு) துவாரங்கள் ஊடாக ஓடும் காற்றை(வாயுவை) கபாலத்திலுள்ள சுழிமுனையில் (உருத்தரித்த நாடி) ஓடுங்கினால், வயோதிபரும்(விருத்தர்) பாலகராக மாறி, மேனியும் பளபளப்பாக ஒளிதேகம் பெற்று சிவந்திடும்.

வயது முதிர்ந்த கிழவரும் ஞானபண்டிதனான முருகப்பெருமான் துணைகொண்டு சக்தியைப் பயன்படுத்தி, வாயுவை சுழிமுனையாகிய 'உருத்தரித்த நாடி'யில் ரேசித்துப் பூரித்துக் கும்பித்து நெறிப்படுத்த முடிந்தால், அவரே குமாரனாவர். மேனியும் சிவந்திடும் என்கிறார் ஆசான் சிவவாக்கியர். இவ்வாறு நம் உடலாகிய ஆலயத்தைப் பற்றி சித்தர்கள் கண்ட பல உண்மைகள் இன்னும் ஆராயப்படாமல் காத்துக் கிடக்கின்றன.

முருகப்பெருமானே இவ்வுலகில் முதன்முறையாக ஞானம் அடைந்தவர். 9 கோடி ஞானியர்க்கும் ஞானம் அதாவது மரணமில்லா பெருவாழ்வு அளித்தவர். முருகப்பெருமானையும் அவர்வழி வந்த முற்றுப்பெற்ற சித்தபெருமக்களையும் போற்றி, அவர்கள் அளித்த உபதேசங்களைக் கடைப்பிடித்தால் பெறுதற்கரிய மானிடப்பிறப்பைப் பெற்றவர் பிறவிப்பிணியை வென்று மரணமிலாப் பெருவாழ்வு பெற்று இறையுடன் இரண்டறக் கலந்து இறைபதமடையலாம்.

ஓங்காரக்குடில் Ongarakudil
Wisdom of Siddhas சித்தரியல்
Aum Muruga ஓம் மு௫கா


சித்தர் அறிவியல் Wisdom of Siththars


நீங்களும் வாசித்து அறிந்து கொள்ளுங்கள்.
https://twitter.com/Ongarakudil


Posted by Nathan Surya 
bbb3



No comments:

Post a Comment