Tuesday, January 30, 2018

சென்னிமலை

கந்த சஷ்டி கவசம் பிறந்த தலம் ..சென்னிமலை !!!

வேறுபெயர்: சிரகிரி - சென்னி-சிரம், மலை-கிரி



சென்னிமலை தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள ஈரோடு மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இவ்வூரின் அமைவிடம் 11.17°N 77.62°E ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 330 மீட்டர் (1082 அடி) உயரத்தில் இருக்கின்றது.

நவ 18 கந்தசஷ்டி

கந்தசஷ்டி கவசம் அரங்கேறிய தலம், ஈரோடு மாவட்டம் சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி கோயில். இங்குள்ள முருகனை வணங்கினால் பிறந்த பயனை அடைய முடியும் என்ற நம்பிக்கையுள்ளது.

தல வரலாறு:

நொய்யல் ஆற்றங்கரையிலுள்ள கொடுமணல் கிராமத்தில் “பெரும்வெளிர்’ இனத்தவர் வாழ்ந்தனர். இவர்கள், பண்ணையக்காரர்களிடம் மாடு மேய்க்கும் வேலைபார்த்தனர். ஒரு காராம்பசுவின் மடியில் தினமும் பால் இல்லாமல் இருந்ததை, ஒரு வேலையாள் கவனித்து பண்ணையாரிடம் கூறினார். ஒரு குறிப்பிட்ட இடத்தில், மடியில் இருந்த பால் முழுவதையும் தானாகவே சொரியவிட்டதை பண்ணையார் கவனித்தார். அந்த இடத்தைத் தோண்டியபோது, ஒரு சிலை கிடைத்தது. அதன் முகம் பொலிவுடன் இருந்தாலும், இடுப்புக்கு கீழ் சரியான வேலைப்பாடின்றி இருந்தது. அக்குறையைப்போக்க அந்தப் பகுதியை சிற்பியைக் கொண்டு உளியால் வேலையைத் துவக்கினார். உளிபட்ட இடத்தில் ரத்தம் பீறிட்டது. பணியை நிறுத்திவிட்டனர். “”ஆண்டவர் அப்படியே இருக்க பிரியப்படுகிறார்”, என்று சென்னிமலையின் மேல் பிரதிஷ்டை செய்தனர். இவருக்கு “தண்டாயுதபாணி’ என்ற திருப்பெயர் இட்டனர். .

அருணகிரிநாதர் திருப்புகழ் பாடி மகிழ்வித்து முருகப்பெருமானிடம் படிக்காசு பெற்ற தலம்.
கந்தசஷ்டி கவசம் அரங்கேற்றம்: “”துதிப்போர்க்கு வல்வினைப்போம், துன்பம்போம், நெஞ்சிற் பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக் கதித்தோங்கும், நிஷ்டையும் கைகூடும் நிமலன் அருள் கந்தசஷ்டி கவசம் தனை”… என்று முருக பக்தர்கள் மனம் உருகி பாடும் கந்தசஷ்டி கவசத்தை இயற்றிய பாலன் தேவராய சுவாமிகள், காங்கேயத்தை அடுத்த மடவிளாகத்தைச் சேர்ந்தவர். கவசத்தை அரங்கேற்றம் செய்ய வேண்டிய இடம், சென்னிமலை தான் என்பதை முருகனின் அருளாணையால் உணர்ந்தார். அதன்படி அங்கே அரங்கேற்றினார். “சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக’ என்ற புகழ்மிக்க வரியை அதில் எழுதியுள்ளார். தந்துள்ளார். “சிரம்’ , “சென்னி’ என்ற வார்த்தைகள் தலையைக் குறிக்கும். மலைகளில் தலையாயது சென்னிமலை என அவர் போற்றியுள்ளார்.

அடிவாரத்திலுள்ள நஞ்சுண்டேஸ்வரர், பட்டாலி பால்வெண்ணீஸ்வரர் கோயில்கள் சிற்பக்கலைக்கு எடுத்துக்காட்டாக உள்ளன.

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 15,526 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். சென்னிமலை மக்களின் சராசரி கல்வியறிவு 75% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 83%, பெண்களின் கல்வியறிவு 67% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. சென்னிமலை மக்கள் தொகையில் 8% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

-நிஷா(2011)
https://www.facebook.com/groups/siddhar.science


    

Related Articles


2000 வருடங்களுக்கு முன் தமிழ்ச்சித்தர்கள் வகுத்த உயிரியல் (Biology)

Nathan Surya
http://thamilsiddhas.blogspot.co.uk/2017/05/biology.html






Posted By Nathan Surya

வள்ளலார்

திருஅருட்பிரகாச வள்ளல் பெருமனாரின் அருட்பாவில்.... ஒருபாவும் ; சமூக அக்கறையும்.... 

"வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்" -எனும் வரிகளை அனைவரும் கேட்டது உண்டு...

★அதுவும் தமிழகத்திற்கு விவசாய காலங்களில் காவிரி நீர் வராத பொழுதும் ; மழை பொய்த்த சூழலிலும் பெரும்பாலான மேடைகளிலும் - ஊடகங்களிலும் இவ்வரிகள் முழங்கப்படுகின்றன...

★இவ்வரிகளுக்குச் சொந்தக்காரர் வள்ளல் பெருமனார்..

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்..என்று தொடங்கும் திருஅருட்பாவின் அடுத்த அடி என்னவென்று தெரியுமா....?

★ "பசியினால் இளைத்தே வீடுதோற் இரந்தும் பசியறாது அயர்ந்த வெற்றரைக் கண்டு உளம் பதைத்தேன்..."என்பதே அந்த வரி...

★ஆம்>>> பசிக் கொடுமையினால் உடல் இளைத்தோர்கள் , வீடுதோறும் பிச்சை கேட்டும் உணவு கிடைக்காத ஏழை எளியோரைக் கண்டு தன் உள்ளம் நடுங்கியதாக வள்ளலார் குறிப்பிடுகிறார்.

★பசிக்கொடுமையினால் அயர்ந்து சோர்ந்த தமிழர்களுக்கு ஏதாவது செய்தாக வேண்டுமென அத் துறவின் உள்ளம் துடிதுடித்தது...

★பத்தொன்பதாம் நூற்றாண்டின் மையப்பகுதியான அன்றைய தமிழகத்தில் ஆங்கிலேய - அன்னியரின் சுரண்டலாலும் ; உணவு பஞ்சத்தாலும் பட்டினி சாவு அதிகரித்தன.....

★எந்த வகையாலும் ஆதாரம் (ஆகாரம்) இல்லாத ஏழை எளியோர்களுக்கு தினசரி பேதமின்றி உணவு வழங்க வள்ளலின் மனம் திட்டம் தீட்டியது... விளைவு...

★ஆதரவற்ற ஏழை எளியோர்களுக்கு தினசரி மதிய - இரவு உணவுகளை வழங்கும் நோக்கத்தோடு சத்திய தர்மச்சாலை எனும் அமைப்பை வடலூரில் வள்ளல் பெருமனார் தொடங்கினார்கள்

23/05/1867 -வைகாசி 11- ஆம் நாள் வியாழக்கிழமை ஏழைகளின் பசி தவிர்க்க சத்திய தர்மச்சாலை வடலூரில் தொடங்கப்பட்டது.


★சத்திய தர்மச்சாலையின் தொடக்க விழாவே புதுமையாய் அமைந்திருந்தது....

◆ஒருபுறம் சத்திய தர்மச்சாலையின் நிரந்தர கட்டிடத்திற்கான மனை முகூர்த்தம் - பூமி பூஜை நடந்துகொண்டிருந்தது..

◆மற்றொருபுறம் ... அப்பொழுதே சத்திய தர்மச்சாலை ஒரு தற்காலிக பந்தலில் - கொட்டகையில் தொடங்கி ஏழைகளின் பசியாற்றும் பணியைச் செய்துகொண்டிருந்தது..

★■◆●ஆம்>>> பொதுமக்களின் நலன் காக்கும் தர்மப்பணியின் அஸ்திவார தோண்டலும் - தர்மக் காரியத்தின் தொடக்க விழாவும் ஒருங்கே நடந்தேறியது....

★"நன்றே செய்க இன்றே செய்க" - என்ற தமிழ் மரபில் வந்த வள்ளலாரின் செயல் வீரத்தை என்னே என்பது....

★தர்மச்சாலையின் தொடக்க விழா நடைபெற்ற பொழுதே , அவ்விடத்தின் அருகில் கிணறு - குளம் முதலிய நீர் நிலைகளும் தோண்டப்பட்டன.

★சத்திய தர்மச்சாலையின் முதல் நாள் அன்னதானத்திற்கு , மாட்டு வண்டிகள் மூன்றில் அரிசி மூட்டைகளும் , ஒரு வண்டியில் காய்கனிகளும் வந்திருந்ததாக மு.அப்பாசாமி என்பவர் எழுதிய கடிதத்தால் அறிய முடிகின்றது... முதல் நாளில் மட்டும் சுமார் மூவாயிரம் பேர் சாப்பிட்டதாக மற்றொரு கடிதத்தால் அறியமுடிகின்றது.

★அத்தர்மச்சாலையின் நோக்கம் குறித்தும் பெருமனார் வெளியிட்டார்கள். அதில்..

"ஜீவ தயையுடைய புண்ணியர்கள் தங்கள் தங்களால் கூடியவரையில் பொருள் முதலிய உதவி செய்து , அதனால் வரும்லாபத்தை பாகஞ் செய்து கொள்ள வேண்டும்.. " என்று கோரிக்கை விடுத்தார்கள் பெருமனார்.

★வடலூரில் தர்மச்சாலையை ஒட்டி அப்பொழுது நிலம் வைத்திருந்த சுமார் நாற்பது பேர் ஒன்றுகூடி எண்பது காணி நிலத்தை இனமாகத் தர்மச்சாலைக்கு எழுதி பத்திரம் செய்து கொடுத்தார்கள்.

★தர்மச்சாலையின் தொடக்க விழாவில் பெருமனார் எழுதிய "ஜீவகாருண்ய ஒழுக்கம்" எனும் உரைநடை நூலின் சில பகுதிகள் வாசிக்கப்பட்டு விளக்கப்பட்டன.

"ஜீவகாருணியத்தின் முக்கிய லட்சியமாவது எது எனில் ; எந்த வகையாலும் ஆதாரமில்லாத ஏழைகளுக்கு உண்டாகின்ற பசி என்கின்ற பெரிய ஆபத்தை நிவர்த்தி செய்கின்றதே முக்கிய லட்சியம் என்று அறிய வேண்டும்..."

" பசி என்கின்ற நெருப்பானது ஏழைகள் தேகத்தினுள் பற்றி எரிகின்ற போது ஆகாராத்தால் அவிக்கின்றதுதான் சீவகாருணியம்..."

என்பன போன்ற பகுதிகள் தர்மச்சாலையின் தொடக்க விழாவில் விவரிக்கப்பட்டன..

★1867- வைகாசி 11- இல் தொடங்கிய சத்திய தர்மச்சாலை இன்று வரை 150-ஆண்டுகளாய் தொய்வின்றி , தடைபடாது - இடைவிடாது ஏழைகளுக்கு உணவு வழங்கி வருகின்றது.

★இப்பதிவின் தொடக்கத்தில் கூறிய ; வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்..." என்ற பாடலின் இரண்டாம் வரியின் செயல் வடிவமே தர்மச்சாலையாய் விளங்குகின்றது.

>>>அப் பாடலின் மூன்றாம் வரி என்னவென்று தெரியுமா....?

★ " ...நீடிய பிணியால் வருந்துகின்றோர் ; என் நேர் உறக் கண்டு உளம் துடித்தேன்..."

என்பதே அப்பாடலின் மூன்றாம் அடி...

★ஆம்>>>> அன்றைய தமிழர்கள் நோய்களால் - பிணிகளால் வருத்தப்படுவதைக் கண்டு வள்ளலாரின் மனம் துடிதுடித்ததாம்.......அதன்விளைவு...

★வள்ளல் பெருமனார் தம் மரபு வழி வந்த தமிழ்ச் சித்தர்களின் வழியில் , நோயாளிகளுக்கு சித்த வைத்தியத்தை தர்மச்சாலையில் வழங்கினார்கள்.

★ஆம்.....தர்மச்சாலை பசிப்பணியோடு ; நாள்பட்ட நோயிகளை நீக்கும் சித்த மருத்துவமனையாகவும் திகழ்தது.

.★ வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்... எனும் அவ் அருட்பாவின் நான்காம் அடி என்னவென்று தெரியுமா....

★" ஈடின் மானிகளாய் ஏழைகளாய் நெஞ்சு இளைத்தவர் தமைக் கண்டே இளைத்தேன் "

●இவ்வரிகளால் நாம் புரிந்துகொள்வது என்ன...?

தமிழகத்தில் மக்கள் ஏழைகளாய் வாழ்வதைக் கண்டு வள்ளலாரின் மனம் வருந்தியதை நாம் புரிந்துகொள்ள முடிகின்றது

★மக்களின் வறுமை ஒழிய என்ன செய்வதென்று அவ் அருள் உள்ளம் சிந்திக்க தொடங்கியது..

★மக்களின் பசிப்பிணிக்கும்... வறுமைக்கும்... நோய்க்கும்... மக்களின் அறியாமையே காரணம் என எண்ணினார்கள்.

★அதன் விளைவு..

தர்மச்சாலை வயிற்றுப் பசியை நீக்கிவதோடு.... மக்களின் அறிவு /ஞானப் பசியையும் நீக்கும் பணியில் ஈடுபட்டது

◆ தினசரி திருக்குறள் சொல்லிக் கொடுக்கப்பட்டது.

◆ மேலும் ; சன்மார்க்கப் போதினி - எனும் பாடசாலையின் மூலம் சிறுவர் முதல் முதியோர் வரை அனைத்து வயதினர்க்கும் கல்வி கற்பிக்கப்பட்டது

◆தர்மச்சாலையிலிருந்து சன்மார்க்க விவேக விருத்தி ' எனும் பத்திரிக்கை இதழும் வெளிவந்தது

★இவ்வாறாக 1867- வைகாசி 11-இல் வள்ளல் பெருமனாரால் தொடங்கப்பட்ட தர்மச்சாலை அன்றைய தமிழர்களின் வாழ்வில் புதிய வெளிச்சத்தை வழங்கியது.

★ தினசரி உணவு வழங்கியது

★ தினசரி நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கியது

★ தினசரி திருக்குறள் கற்பிக்கப்பட்டு தனிமனித ஒழுக்கத்தை வளர்த்தது

★ சிறுவர் முதல் முதியோர் வரை அனைவருக்கும் பல்வேறு அறிவு தகவல்களை சொல்லிக்கொடுத்தது

ஆம்>>> தர்மச்சாலை வள்ளலார் காலத்தில் சோறு வழங்குவதோடு மட்டுமில்லாமல் அறிவுசால் பல்கலைக் கழகம் போல் விளங்கியது.....

(ஆனால்...இன்றோ....? சன்மார்க்க சங்கத்தீர் சிந்திப்பீர்...!)

(கருத்துப் பதிவும் பகிர்வும் அருள்பாவலர் சக்திவேல் .வே. )


   

Related Articles


2000 வருடங்களுக்கு முன் தமிழ்ச்சித்தர்கள் வகுத்த உயிரியல் (Biology)

Nathan Surya
http://thamilsiddhas.blogspot.co.uk/2017/05/biology.html






Posted By Nathan Surya

 Aum Muruga ஓம் முருகா 

Monday, January 29, 2018

தஞ்சைப் பெருங்கோவில்

பொறியாளர் ஒருவர் மூலம் நாம் பெற்ற தஞ்சை பெரியகோவில் கட்டுமானம் பற்றிய ஒரு தகவல்..



கோபுர உச்சியை உற்று நோக்குங்கள்..

கோபுரஉச்சியை நன்கு உற்று நோக்குங்கள். பிரம்மாந்திர கல் எனப்படும் தூபிக்கல். இது ஒரு கல்லோ, அல்லது பல கற்களின் சேர்க்கையோ இதன் எடை 80 டன்.. இந்த பிம்மாந்திர கல்லை தாங்கும் அந்த சதுரவடிவக் கல்லை நோக்குங்கள்.. அந்த கல்லும் 80 டன்.. அந்த சதுரக்கல்லின் மேல் பக்கத்திற்கு இரண்டு நந்தியாக மொத்தம் எட்டு நந்தி.. ஒவ்வொறு நந்தியின் எடை 10 டன். ஆக, எட்டு நந்தியின் எடை மொத்த எடை 80 டன்..

இந்த மூன்றும்தான் பெரியகோவிலின் அத்திவாரம்..

இது என்ன விந்தை.. அத்திவாரம் அடியில்தானே இருக்கும்.. தலைகீழான கூற்றாய் உள்ளதே..? நாம் ஒரு, செங்கற்களை கொண்டு ஒரு வீடு கட்டும்போது, கட்டிடத்தின் உயரம் 12 அடி என்றால் 4 அடிக்காவது அத்திவாரம் இடுவோம்..

பெரியகோவில் உயரம் 216 அடி.. முழுக்க கற்களைக்கொண்டு எழுப்பப்படும் ஒரு பிரம்மாண்ட கற்கோவில்.. கற்களின் எடையோ மிக மிக அதிகம்.. இவ்வளவு பெரிய கோவிலுக்கு அத்திவாரம் எவ்வாறு அமையும்.. குறைந்தது 50 அடி ஆழம், 50 அடி அகல அத்திவாரம் வேண்டும்.. இந்த அளவு சாத்தியமே இல்லை.. 50 அடி ஆழத்தில் வெறும் தண்ணீரும் புகை மண்டலமாகத்தான் இருக்கும்..

ஆனால் .. பெரியகோவிலின் அத்திவாரம் வெறும் 5 அடிதான்..

மேலும் ஒரு வியப்பு.. இது எப்படி சாத்தியம்..?

இங்குதான் நம்ம சோழ விஞ்ஞானிகளின்/ கருவூர்ச்சித்தரின் வியத்தகு அறிவியல் நம்மை சிலிர்ப்படையச் செய்கிறது..



பெரியகோவில் கட்டுமானத்தை, அதாவது கற்கள் இணைக்கப்பட்டதை.. இலகு பிணைப்பு என்கிறார்கள். அதாவது Loose joint என்கிறார்கள்.. அதாவது ஒவ்வொறு கல்லையும் இணைக்கும் போது, ஒரு நூலளவு  இடைவெளிவிட்டு  அடுக்கினார்கள்..

எதற்காக..?



நமது கிராமத்தில் பயன்பட்ட கயிற்று கட்டிலை நினைவில் கொள்ளுங்கள்.. கயிறுகளின் பிணைப்பு லூஸாகத்தான் இருக்கும்.. அதன் மேல் ஆட்கள் உட்காறும் போது, கயிறுகள் அனைத்தும் உள் வாங்கி இறுகிவிடும்.. கயிறுகளின் பிணைப்பு பலமாகிறது..

இதன் அடிப்படைதான் பெரியகோவில் கட்டுமானம் ..

லூஸாக கற்களை அடுக்கிக்கொண்டே சென்று, அதன் உச்சியில் மிக பிரம்மாண்டமான எடையை
அழுத்தச் செய்வதன் மூலம், மொத்தகற்களும் இறுகி மிக பலமான இணைப்பை பெறுகின்றன...

இதுதான் அந்த 240 டன் எடை கொண்ட, தூபி, சதுரக்கல் மற்றும் எட்டு நந்தி..

அத்திவாரம் கோவிலின் உச்சியில் இடம் பெற்ற
அதிசியம் இது..

எத்தனை பூகம்பம் வந்தாலும் எந்த கல்லும் அசையாது. எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் நிலைபெற்று இருக்கும்..

*சூரியசந்திரர் இருக்கும் வரை இக்கோவிலும்* *இருக்கும்... என்ற நம் இராஜராஜ சோழ மன்னரின் நம்பிக்கை எந்த* *காலத்திலும் பொய்க்காது..*

ஓம் நமசிவாய

  

Related Articles


2000 வருடங்களுக்கு முன் தமிழ்ச்சித்தர்கள் வகுத்த உயிரியல் (Biology)

Nathan Surya
http://thamilsiddhas.blogspot.co.uk/2017/05/biology.html






Posted By Nathan Surya

 Aum Muruga ஓம் முருகா 

Sunday, January 28, 2018

பிறவிக்கடல்

#தமிழ்ச்சித்தர்கள் அருளிய பிறவிக்கடல் கடக்க / பிறவிப்பிணி நீக்கத் தேவையான உபாயங்கள்

உயிர்க்கொலை தவிர்த்தல், புலால் மறுத்தல்.
சுத்த சைவ உணவை மேற்கொள்ளுதல்
மாதம் ஒருவருக்கேனும் பசித்த ஏழைகளுக்கு
பசியாற்றுவிக்க வேண்டும்.
அருட்ஜோதி வள்ளலாய் விளங்கும் முருகப்பெருமானின் மந்திரமாகிய “ஓம் சரவண பவ” என்றோ “ஓம் முருகா”
என்றோ முருகனின் நாமத்தை நாமஜெபமாக காலை, மாலை குறைந்தது ஐந்து நிமிடமேனும் செபித்திடல் வேண்டும்.
சாதி, மத, இன, மொழி, தேச, பாகுபாடின்றி மனிதர்கள் அனைவரையும் ஒரு தாய் பிள்ளைகளாக பாவித்து அன்பு செலுத்தி ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ளுதல் வேண்டும்.

 

Related Articles


2000 வருடங்களுக்கு முன் தமிழ்ச்சித்தர்கள் வகுத்த உயிரியல் (Biology)

Nathan Surya
http://thamilsiddhas.blogspot.co.uk/2017/05/biology.html





Posted By Nathan Surya

 Aum Muruga ஓம் முருகா 

Friday, January 26, 2018

பத்தாவது வாசல்

சித்தர் அறிவியல்: 72,000 நாடி நரம்புகளில் முதன்மை நாடி..


சித்தர்கள் The Ascended Masters.

சரமாகிய மூச்சுக்கலை /வாசியோகத்திற்கு அதிபதி சரவணனாகிய முருகப்பெருமான். முருகப்பெருமானின் ஆசியில்லாமல் பத்தாம் வாசலில் வாசி வசப்படாது. ஞானத்திற்குத் தலைவன் ஞானபண்டிதனே.

முருகப்பெருமானின் முதன்மைச் சீடர்களான சித்தர்கள் அறிவியலின்படி மனதவுடல் 72,000 நாடி நரம்புகளால் ஆனதாகக் கூறப்பட்டுள்ளது. இதில் தசநாடி(பத்து நாடிகள்) முக்கியமானதென்றும், அவற்றுள்ளும் முக்கியமானவை மூன்று. அம்மூன்றிலும் மிக முக்கியமான நாடி ஒன்றுண்டு. அதுவே, பிறவிப்பிணியை ஒழிக்கக்கூடிய நாடி என்கின்றனர். அதற்கு காரணகுருவாகிய சித்தர்கள் துணை வேண்டும். அவர்களை நாடி நாம்தான் போதல் வேண்டும். இதனையே "உருத்தரித்த நாடி" என்கிறார் ஆசான் சிவவாக்கியர். அதையே "நரம்பெனு நாடியிவையினுக் கெல்லா முரம்பெறு நாடியொன் றுண்டு" என்பார் ஆசான் ஒளவையார். இவை பற்றி விளக்கமாக பிறிதொரு பதிவிற் பார்க்கலாம். இந்த நாடியின் இறையாசியுடன் கதவைத் திறந்தால் அதுவே பத்தாவது வாசல் ஆகும்


எழுபத்தீ ராயிர நாடி யவற்றுள்
முழுபத்து நாடி முதல்

-ஒளவைக்குறள்- நாடி நாரணை - குறள் எண்:1-

நரம்பெனு நாடி யிவையினுக் கெல்லாம்
உரம்பெறு நாடியொன் றுண்டு.

-ஒளவைக்குறள்- நாடி நாரணை - குறள் எண்:2-

"உருத்தரித்த நாடியில் ஓடுங்குகின்ற வாயுவைக்
கருத்தினால் இருத்தியே கபாலம் ஏற்ற வல்லீரேல்
விருத்தரும் பாலராவர் மேனியும் சிவந்திடும்
அருள் தரித்த நாதர் பாதம் அம்மை பாதம் உண்மையே."

- ஆசான் சிவவாக்கியார்-

"இருப்பன நாடி எழுபத்தீரா
யிரமான தேகத்தில் ஏலப் பெருநாடி
ஒக்கதசமத்தொழிலை ஊக்கதச வாயுக்கள்
தக்கபடி என்றே சாரும்”


"பொருந்துமோ ருந்திக் கீழே
புகன்றேதுஞ் சுழியைப் பற்றி
எழுந்ததோர் நாடி தானும்
எழுபத்தி ராயி ரந்தான்
தெரிந்ததோ ரிவற்றில் பத்துத்
தசநாடி இவற்றில் மூன்றும்
பரிந்தத்தோர் வாத பித்தம்
படர்ஐயும் அறிந்து பாரே"



நன்றி
சித்தர்கள் The Ascended Masters.

Aum Muruga ஓம் மு௫கா

ஓங்காரக்குடில் Ongarakudil

சாகாக்கல்வி / மரணமிலாப் பெருவாழ்வு / மோட்ச கதி ...




இறப்பு என்பது உயிர் இழப்பல்ல, அது உடல் இழப்பு.
சித்தர்கள் The Ascended Masters

அகால மரணங்களைத் தவிர மற்ற மரணங்களை நாம் அழுவதை விடுத்துப் பறை அடித்து ஆடிப்பாடி கொண்டாடுவதே தமிழர் மரபு. ஏனெனில் நம் முன்னோர் இறப்பு-பிறப்புப் பற்றித் தெளிவாக அறிந்திருந்தனர். அதாவது உயிரானது ஆக்கப்படுவதும் இல்லை மற்றும் அழிக்கப்படுவதும் இல்லை. நம் உயிரானது பல் வகையான உடல்களுக்குள் நம் வினைகளுக்கேற்ப பிறப்பு-இறப்பு(கர்மா) சக்கரத்தில் மாட்டிப் பிறவிப்பிணியால் தொடர்ச்சியாக அவதியுறுகின்றது.

இவ்வாறான பிறவிப்பிணியை 'முற்றுப்பெற்ற குரு' முகாந்திரமாக நீக்கி, நாம் எங்கிருந்து வந்தோமோ அந்த வீட்டை மீண்டும் அடைவதே ஆன்ம விடுதலை / வீடு பேறடைதல் / இறையுடன் இரண்டறக் கலத்தல் / சாகாக்கல்வி / மரணமிலாப் பெருவாழ்வு / மோட்ச கதி / பேரின்பம் அடைதல் / பேரறிவு பெறல் / முக்தி அடைதல் / இறைநிலை(சிவபதம்) எய்தல் / முற்றுப்பெறல்எனப் பலபெயர்களால் அழைக்கப்படுகின்றன.

இது மனிதப் பிறப்பிற்கே சாத்தியம். ஆதலாலேயே மனிதப் பிறப்பு என்பது மிகவும் அரிதானதாகும். இந்த மனிதப் பிறப்பெடுக்க முன் நம் ஆன்மாவானது மனிதரல்லாத எண்ணிலாப் பிறப்புக்களை எடுத்துள்ளது என்கின்றனர் சித்தபெருமக்கள். பல பிறவிகள் எடுத்த பிறகே இந்த மானிடப்பிறவியை அடைகிறோம். சிவபுராணத்தில் "புல்லாய், பூடாய், புழுவாய், மரமாகி, பல் மிருகமாய், மனிதராய், பேயாய், கணங்களாய், வல் அசுரராய், தேவராய் சொல்லா நின்ற இத்தாவர சங்கமத்துள் எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான் !" என்கிறார் ஆசான் மாணிக்கவாசகப் பெருமான்.

"அரிது! அரிது! மானிடர் ஆதல் அரிது
மானிடராயினும்..
கூன் குருடு செவிடு பேடு நீங்கிப் பிறத்தல் அரிது
கூன் குருடு செவிடு பேடு நீங்கிப் பிறந்த காலையும்
ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது
ஞானமும் கல்வியும் நயந்த காலையும்
தானமும் தவமும் தான் செய்தல் அரிது
தானமும் தவமும் தான் செய்தலாயின்
வானவர் நாடி வழி பிறந்திடுமே!"

- ஆசான் ஓளவையார்

பசித்திருந்து நோன்பு இயற்றுவதே தவம். பசித்தோர்க்கு உணவளிப்பதே உயர்ந்த தானம். தானமும் தவமும் செய்பவர்க்கு இறையருள் கைகூடும். அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது. அதனிலும் அரிது கூன், குருடு, செவிடு இல்லாமல் பிறத்தல் அரிது, அதனிலும் அரிது ஞானம் கிடைத்தல் அரிது. அதனிலும் அரிது தானம், தவம் போன்றவை கிடைத்தல் அரிது என்றும். தானமும் தவமும் செய்யும் வாய்ப்புக் கிடைத்துவிட்டால் இறையுடன் இரண்டறக் கலத்தற்கான வழி தானே கிடைத்துவிடும் என்று கூறி இருக்கிறார் ஆசான் ஓளவையார் பெருமாட்டி

பிறவியே அறியாமை மிகு பேதமையென்றும், அந்தப் பிறப்பு-இறப்பு(கர்மா) எனும் பிணியை நீக்கி நாம் வெற்றி பெறுவதே உயர்ந்த அறிவென்கிறார் பிறவிப்பிணி நீக்கிய மகான் திருவள்ளுவப் பெருமான்.

''பிறப்பென்னும் பேதமை நீங்கச் சிறப்பென்னும்
செம்பொருள் காண்பது அறிவு.''

- திருக்குறள் (ஆசான் திருவள்ளுவர்)

ஒருவர் ஒன்றை விரும்புவதனால் பிறவா நிலையை விரும்ப வேண்டும். அதை (இறையிடம்) வேண்டினால் மற்றவை தானாகவே கிடைக்கும். எனவே, மீண்டும் மீண்டும் பிறந்து துன்பப்படாமலிருக்கப் பேரறிவான "பிறவாமை"யை நாம் இறையிடம் வேண்டுவோம்.

"வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது
வேண்டாமை வேண்ட வரும்."

- திருக்குறள் (ஆசான் திருவள்ளுவர்)


"என்றானும் சாவாமல் கற்பதே கல்வி"
- ஆசான் ஔவையார்.
"பிறப்பென்பது பேதமை"
- ஆசான் திருவள்ளுவர்.
"சகாதவனே சன்மார்க்கி"
- ஆசான் வள்ளலார்


எனவே கிடைத்த இந்தப் பிறவியை ஒவ்வொருவரும் வீணாக்காமல் சரியாகப் பயன்படுத்திப் பலன் அடைய வேண்டும் என்கிறார் ஆசான் திருமூலர் பெருமான்.

“பெறுதர்கரிய பிறவியை பெற்றும்
பெறுதற் கரிய பிரானடி பேணார்
பெறுதற் கரிய பிராணிகள் எல்லாம்
பெறுதற் கரியதோர் பேறிழந் தாரே”

- திருமந்திரம் (ஆசான் திருமூலர்)

ஓம் ஆசான் மாணிக்கவாசகர் திருவடிகள் சரணம்.
ஓம் ஆசான் ஓளவையார் திருவடிகள் சரணம்.
ஓம் ஆசான் திருவள்ளுவர் திருவடிகள் சரணம்.
ஓம் ஆசான் திருமூலர் திருவடிகள் சரணம்.

ஓம் எண்ணிலாக்கோடி சித்த, ரிஷி, கணங்கள் திருவடிகள் போற்றி

நன்றி! 
-Nàthàn கண்ணன் Suryà
10/07/2015
ஓங்காரக்குடில் Ongarakudil
 Aum Muruga ஓம் மு௫கா 

சித்தர் அறிவியல் Wisdom of Siththars


நீங்களும் வாசித்து அறிந்து கொள்ளுங்கள்.
https://twitter.com/Ongarakudil


Posted by Nathan Surya 

உடற்கூறு கணிதம்: 21600 மூச்சுக்காற்று

உடற்கூறு கணிதம்: 21600 மூச்சுக்காற்று

#முருகப்பெருமானின் சீடர்களான 

#தமிழ்ச்சித்தர்கள் வகுத்த #உடற்கூறுகணிதம்!

எண்ணும் எழுத்தும்: 21600 மூச்சுக்காற்று


தமிழ்ச் சித்தர்கள்
__________________
வகுத்த
__________________
உடற்கூறு கணிதம்!

__________________
எண்ணும் எழுத்தும்!

21600 மூச்சுக்காற்று

உயிரின் இயக்கமே மூச்சுக்காற்றின் இயக்கமாகும். மூச்சுக்காற்றின் இயக்கமே உயிரின் இயக்கமாகும். சித்தர்களின் கணக்குப்படி மனிதனின் மூச்சுக்காற்று நாள் ஒன்றுக்கு 21,600 முறை வந்து போவதாகும். சீவ தேகத்தில் இயங்குகின்ற உயிர்க்காற்று, உச்சுவாசம் (உட்செல்லுதல் 10800/நாள்), நிச்சுவாசம் (வெளியேறுதல் 10800/நாள்) சேர்ந்து ஒரு மூச்சாக விளங்குவது. இப்படி ஒரு தினத்தில் 21,600 மூச்சு நாம் விடுகின்றோம். இம் மூச்சு ஒவ்வொன்றிலும் ஆன்ம சக்திக் கலை (அ+உ = ய) பத்தும் கலந்து வெளிப்பட்டுக் கொண்டே உள்ளது. ஆகையால் நாளொன்றுக்கு வெளிப்படுவது, (21,600 X 10 )= 216000 ஆன்ம சக்திக் கலைகள்.

சரம் என்றால் மூச்சுள்ளது. அசரம் என்றால் மூச்சில்லாதது. இவையே சித்தர்கள் உலகை அழைப்பதற்குரிய வார்த்தையாக சராசரம் என்று கூறுகிறார்கள். இந்த உலகமே மூச்சை அடிப்படையாக வைத்தது என்பதற்காகவும், அது முட்டையின் வடிவத்தை ஒத்திருப்பது என்பதற்காகவும், அண்ட சராசரம்(அண்டம் என்றால் முட்டை என்று பொருள்) என்று அழைத்து வந்தனர்.

1நிமிடத்திற்கு 15 மூச்சும், 1 மணி நேரத்திற்கு 900 மூச்சும்; 1 நாளிற்கு 21,600 மூச்சும் ஓடுகின்றது. உயிர்மெய்யெழுத்துக்கள் 216 என்பது இந்த 21,600 மூச்சுக்களையே குறிக்கும் ஒரு மனிதன் தன் வாழ்நாளில் தினமும் 21,600 மூச்சுக்கு மிகாமல் உபயோகம் செய்தால் அவனுடைய ஆயுள் 120 ஆண்டுகளாகும். ஆனால் உட்கார்ந்திருக்கும் போது 12மூச்சும், நடக்கும் போது 18 மூச்சும், ஒடும்போது 25 மூச்சும், தூங்கும் போது 32 மூச்சும,; உடலுறவின் போதும், கோபம் முதலான உணர்ச்சிகளில் சிக்கும் போது 64 மூச்சும் 1 நிமிடத்தில் ஓடுகின்றன. இந்த மூச்சினுடைய அளவு எவ்வளவு மிகுதியாகிறதோ அதற்கு தகுந்தாற்போல் ஆயுள் குறைகிறது.

அருளொலி வீசும் ஆன்மா (அ+உ+ம்=) ஓம் என்றும் அதில் அவும் (8) உவும் (2) சேர்ந்து பத்தாக, ம் – ஆறாக உள்ளது. இதில் 10 நாதமாகவும் 6 விந்தாகவும் கூறப்படும். இதன் கலப்பு (10 X 6) = 60 நாத விந்து கலையாகவும் கூறப்படும்.

இது கொண்டு, ஆன்மானுபவ ஞானிகள், தினம் வெளிப்படுகின்ற 216000 ஆன்ம சக்திக் கலைகளை, 60 ஆகிய நாத விந்து ஆன்ம கலையாற் பகுத்து, காலக் கணக்கு கண்டுள்ளனர்.

அதாவது 60 கலை ஒரு வினாடி என்றும், 60 விநாடி (60 X 60 = 3600 கலை) ஒரு நாழிகை ஆகவும், 60 நாழிகை (60 X 60 X 60 = 216000 கலை ஒரு நாளாகவும் விளங்குகின்றதாம்.

ஒரு நாளில் ஓடக்கூடிய மூச்சுக்களின் எண்ணிக்கை 21,600 என்று பார்த்தோம். சிதம்பரத்தில் உள்ள ஆனந்தமய கோசத்தில் தான், நடராஜர் நடனமிடும் சிற்சபை எனும் பொன்னம்பலம் அமைந்துள்ளது.இந்த சிற்சபைபை உடற்கூறு கணிதத்தின் அடிப்படையில்தான் அமைந்திருக்கின்றது. சிதம்பரத்தில் உள்ள பொன்னம்பலத்தில் 64 கை மரங்கள் உள்ளன. இந்த 64ம் 64வகையான கலைகளாகும். பொன்னம்பலத்தின் 21600 தங்க ஓடுகள் உள்ளன. இவை ஒரு மனிதனின் ஒரு நாளுக்கான சராசரி மூச்சுக் காற்றுக்கான எண்ணிக்கை. 5 வெள்ளிப் படிகள் உள்ளன. இவை ஐந்தெழுத்து மந்திரமான நமசிவாயத்தினையும் (பஞ்ச பூதங்களையும்) குறிப்பன.இதையே விதியை மதியால் வெல்லலாம் என்பார்கள். இங்கு மதி என்று கூறப்படுவது புத்தி அல்ல மதி என்றால் சந்திரன் 16 அங்குலம் ஓடக்கூடிய சந்திரகலையை சுருக்க சுருக்க ஆயுள் விருத்தியாகும். எனவே விதி முடிவும் விலகியே போகும்.

வான்வெளி ஆராய்ச்சியின் அடிப்படைக் கல்வி என்னவென்றால் மூச்சே நேரம். இதுவே அனைத்து வேதங்களும், சித்தர்களும், ரிஷிகளும், மகான்களும் சொல்வதும்.

நாம் விடும் மூச்சானது உள்ளே வெளியே என்று இரண்டு பகுதிகளை கொண்டுள்ளது. காலச்சக்ரம் என்பது நாம் விடும் மூச்சைக் கொண்டும், நேரத்தைக் கொண்டும், வான்வெளியைக் கொண்டும் கணக்கிடப்படுவது.

10 வார்த்தைகளைக் கொண்ட அட்சரத்தை உச்சரிக்க நமக்கு ஒரு மூச்சை அதாவது நான்கு விநாடி செலவு செய்ய வேண்டியது இருக்கும்.

மூச்சின் கணக்கு:

1. ஒரு நாள் நாம் விடும் மூச்சு 21600 . இதில் நாளின் முதல் பாதியில் 10800 மறு பாதியில் 10800.
2. ஒரு மூச்சென்பது நான்கு விநாடிகள்.

நேரத்தின் கணக்கு:
1. 24 மணிநேரம் x 60 நிமிடங்கள் = 1440 நிமிடங்கள்
2. 1440 நிமிடங்கள்x 60 விநாடிகள்= 86400 விநாடிகள்; 86400/21600 = 4 விநாடிகள்= 1 மூச்சு
3. 1 கடிகை என்பது 24 நிமிடங்கள்= 1440 விநாடிகள் (=360 மூச்சுக்கள் )

சித்தர் வான்வெளியின் நேரக் கணக்கு:
1. ஒரு சதுர்யுகம் = 1 கல்ப வருடம்/1000
2. 10 வார்த்தைகளைக் கொண்ட அட்சரம் = 1 மூச்சு (மூச்சு = 4 விநாடிகள்) 360 மூச்சுக்கள் = 1 கடிகை (=24 நிமிடங்கள்)
3. 60 கடிகைகள் = 1 நாள்
4. 1 சதுர்யுகம் = 4320000 சூரிய வருடங்கள்


ஒரு யுகம் நான்காக பிரிக்கப்பட்டுள்ளது:

1. கிரேதா யுகம் = 1728000 சூரிய வருடங்கள்

2. திரேதா யுகம் = 1296000 சூரிய வருடங்கள்

3. துவாபர யுகம் = 864000 சூரிய வருடங்கள்

4. கலி யுகம் = 432000 சூரிய வருடங்கள்

நந்தனார் கீர்த்தனையில் 'எட்டும் இரண்டமறியாத மூடன்' என்கிறார். 8 என்பது 'அ' காரமாக தமிழ் எழுத்துக்களில் குறிக்கப்படுகிறது. இரண்டு என்பது 'உ' காரமாக தமிழ் எழுத்துக்களில் குறிக்கப்படுகிறது. இதையே அகார உகாரம் என்று கூறுகின்றார்கள். 8*2=16 அங்குலம் ஓடும் சந்திரகலையை குறிக்கிறது.

'எண்ணும் எழுத்தும் கண்ணெனத்
தகும்'


ஓங்காரக்குடில் Ongarakudil
❤️🙏சித்தர் அறிவியல் Wisdom of Siththars❤️🙏
Aum Muruga ஓம் மு௫கா


Related Articles


2000 வருடங்களுக்கு முன் தமிழ்ச்சித்தர்கள் வகுத்த உயிரியல் (Biology)

Nathan Surya
http://thamilsiddhas.blogspot.co.uk/2017/05/biology.html





Posted By Nathan Surya